“கருணையே வடிவானாவன், அவன் கருணாமுர்த்தி;
கொடியவரையும் மன்னித்து வாழவைப்பான் திருத்தி”, என
ஆண்டவன் துதிபாடியது ஒரு கோஷ்ட்டி.
“ஞாபகமறதி கொஞ்சம் அதிகம் தான் உங்கள் ஆண்டவனுக்கு;
கொடுங்கோலர்களையும் கேடு விளைவிக்கும் அரசியல்வாதிகளையும்
ஆனந்தமாய் கூத்தடிக்க அனுமதித்து
அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்ற கேள்விக்கடலில் தத்தளிக்கும் மக்களை,
சுனாமி, எரிமலை, சூறாவளி போன்ற கொடிய மிருகங்களால் சோதிக்கிறானே
வயதாகி விட்டது போலும்”, என்றேன்.
கோஷ்ட்டியில் ஒருவன் பெருமிதத்துடன்,
“போன பிறப்பில் செய்த பிழைகள், அதுதான் இந்த
பிறப்பில் அனுபவிக்கின்றனர்”, என்றான்.
அட அது சரி;
“அரசியலையும் சாதியையும் ஆயுதமாய் பயன்படுத்தும்
மனித திமிங்கலஙள் சென்ற பிறப்பில் செய்த புண்ணியங்களின்
பலனே இந்த பணமும், வசதியும்;
உன் கோமணம் உற்பட உறுவி உன்னை துயரத்தின் எல்லைக்குத் தள்ளுவான்,
வாயை திறக்காதே; கவலை படாதே;
அட இந்த பிறப்பில் தவித்தால் என்ன,
உன் ஆண்டவனின் விதிமுறைப்படி
அடுத்த பிறப்பில் சுகமாய் வாழ்வாய்…பொறுத்திரு”
ஆள விடுங்கடா சாமி..