Archive for the ‘tamil’ Category

h1

“தமிழகத்தின் பால் தாக்கரே” சீமான்

May 25, 2011

இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்லுகிறேன்? என்று இன்று கோபித்து கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்து பேசுவதில்லை. “வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம்” என்பதை தவிர அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமல் பேசிவருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குபடியே சிந்தித்தாலும் ‘தமிழ்மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை தமிழின் பெருமைக்கு சாதனமாக கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கிய காரணமாய் சொல்லுகிறேன்.அய்யா தந்தை பெரியார்

அனைத்து இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம், அனைத்து இந்திய அந்த சங்கம் இந்த சங்கம் என்று இருக்கும். அதில் எல்லாம் மாநிலம், மாவட்டம், மாநகரம் என்று ஒவ்வொரு குழு அடங்கும். அது போல தேவர் குழு, செட்டியார் குழு, முதலியார் குழு, நாடார் குழு, பிள்ளை குழு என்று எல்லாம் சேர்ந்து நாம் தமிழர் என்று ஒரு சங்கம் அமைத்து உள்ளது. சரி எதுக்கு இந்த சங்கமுன்னு கேட்டா எல்லாரையும் ஒன்று இன்னைத்த பிறகு எல்லாருக்கும் அறிவுரை கூறி ஜாதி பற்றை அல்லது வெறியை கைவிட செஞ்சுடுவாங்கலாம். ‘இவன்’ என்ற பார்த்திபன் படம் நினைவுக்கு வருது. அதுல மிஸ்டர் பார்த்திபன் என்ன செய்வாருன்னா எல்லா வில்லன்களை கடத்தி பேசியே திறித்திடுவாறு. நல்ல தமாஷா இருக்கும். அதே வித்தையை நம்ம தன்மான சிங்..ச்சி புலி சீமான் செஞ்சினு இருக்காறு. ஏதோ அவவன் தேவை இல்லாம தேவனாகவும், வெட்டியா வன்னியனாகவும், சும்மனாச்சுக்கும் செட்டியாகவும், டைம் பாஸ்சுக்கு தலித் ஆகவும் இருக்கான் ரெண்டு நல்ல வார்த்தை சொல்லி திறுதருதற்கு. இந்த கூத்துக்கு பின்னாடி ஒரு கூம்பல் வாங்க தமிழரே கொள்கை தேவையில்லை, கூட்டம் தான் தேவை, கட்சி தான் தேவை. வீரம் தான் தேவை என்று இயேசு அழைக்கிறார் கும்பல் கூச்சப்படும் அளவிற்கு சகட்டு மேனிக்கு பிரச்சாரம் செய்கிறார்கள். எல்லா ஜாதிக்காரனும் (சுத்ரவாள்) செந்துக்குன்னு தலித் மக்களை வேற வாங்க தமிழரே என்று தீடீர் பாசம் செலுத்துறான்(ராம ஜன்மபூமி நினைவிற்கு வருது). சும்மா வாங்க பிரச்சனைய அப்புறம் பார்த்துப்போம் என்று எத கேட்டாலும் இப்போ ஈழம் தான் ஒரே பிரச்சனைன்னு ஜார்ஜ் புஷ் 9/11 போல அரச்ச மாவையே அரைக்கிறான். ஈழ போர் ஏன் இப்படி ஆச்சின்னு மட்டும் கேட்டோம் காங்கிரஸ், சோனியா, கருணாநிதி, இளங்கோவன், அசின், விவேக் ஒபரோய் என்று எல்லாரையும் இழுத்து ஒரு கலட்சபம் நடத்திடுவாங்க. சரி இப்ப என்ன செய்யலாம் என்றால் அ.தி.மு.க விற்கு வோட்டு , கனிமொழிக்கு சிறை, மோடி போன்ற ஆட்சி என்று தே.மு.தி.க வின் அடிமட்ட தொண்டனுக்கு உள்ள அரசியல் சமூக அறிவை வியக்கும் அளவிற்கு பேசுவார்கள்.

Naam Thamizhar

"தமிழகத்தின் பால் தாக்கரே" சீமான்


தேசியவாதம் அயோக்கியனின் உறைவிடம். எப்படி இந்திய தேசியத்திற்கு கண்மூடித்தனமாய் ஒரு பாகிஸ்தான் தேவைப்படுகிறதோ அதே போல் தமிழ் தேசியத்திற்கு சிங்களம் தேவைப்படுகிறது. சிங்களம் இல்ல விட்டால் வேறு ஒரு தேசியம் எதிரியாக சித்தரிக்கபடும். ராஜபக்சேவும் சிங்கள இனவாதிகளும் எதை எதிர்பார்க்கிறகளோ அதையே இவர்களும் செய்கிறார்கள். கார்கில் பொழுது நம்ப அம்பி அரவிந்த்சாமி ஒரு விளம்பரத்துல சொல்லுவாறு ‘இந்துஸ்தானம் எழுந்தால் எந்த ஸ்தனமும் மிஞ்சாது’ அதே போல் நம்ம சுத்திர குட்டி சீமான் சிங்களவனை அழிச்சிடிவோம் என்று உதார் விடறாரு. பாமர சிங்கள மக்களை இதை சொல்லியே பயமுருத்திவிடுவார்கள் சிங்கள குண்டர்கள்.
எதோ தேசியவாதம் ஜாதி நல்லிணக்கம் பேசுறீங்க சரி, பெரியாரை ஏன் சீண்டனும். பெரியார் தேசியத்தை வெறுத்தவர், ஜாதி ஒழிப்பில் காலமெல்லாம் உறுதியாய் இருந்தவர், பார்பனீயம் அல்லது இந்து மதத்தை வேரறுக்க முற்பட்டவர், அடிப்படைவாதத்தை எதிர்த்தவர் என்று எதையெல்லாம் செய்தாரோ அதற்கு நேர் மாறாக செயல் படுகிறது சீமானின் நாம் தமிழர். வீரமணி பெரியார் பெயரை கெடுத்தது பத்தாது என்று இன்று சீமானும் நாம் தமிழரும் உலா வருகிறார்கள். அம்பேத்கருக்கும் முதுராமலிங்கதிற்கும் மாலை அன்னிவிச்சு ஹிந்து பாசிஸ்டுகள் ரேஞ்சில் அம்பேத்கரை ஜாதி தலைவர் ஆக்கிவிட்டார் சீமான். இதற்கு சப்பை கட்டு கட்டும் முற்போக்காளர்கள் வேறு. அப்போ போய் காஞ்சி பெரியவாளுக்கும் மாலை சாத்துங்கோ என்ற எண்ணம் எழும் முன்பே மோடி புகழை திவ்யமாய் பாடும் சீமான். ஈழத்தில் இஸ்லாமியர்களை வதைத்தார்கள் விடுதலை புலிகள் இப்போ எதிரிக்கு எதிரிக்கு நண்பன் என்ற முறையில் மோடி போலும். வறட்டு தமிழ் தேசியவாதம், ஜாதி சமரசம், கண்மூடி தனமான தொண்டர் கூட்டம் எல்லாம் சேர்த்து தமிழகத்தில் ஒரு பால் தக்கரே உருவாகிவிட்டார். வெளி மாநிலத்தவரை அடிக்காமல் இருப்பது தான் ஒரு குறை.
ரஜினி ரசிகர் போல் தலைவன் வேணும், வழி காட்டனும் என்று சொல்லாமல், சீமான் போன்ற அரசியல் சமூக சந்தர்பவாதிகள் பின் செல்லாமல் பெரியார் அம்பேத்கர் பாதையில் தனி மனித ஒழுக்கத்தினால் ஜாதியை ஒழித்து மதங்களை கடந்து தமிழராய் இல்லை மனிதனாய், உழைக்கும் மக்களாய் ஒன்று சேர்வோம்.

h1

நேர்க்காணல்…கடவுளுடன்

May 29, 2010

தொகுப்பாளர்: அனைவருக்கும் வணக்கம். இன்னிக்கி ‘பேசலாம் வாங்க’ நிகழ்ச்சில யாருமே எதிர்பாக்காத ஒரு பிரமுகர சந்திக்க போறோம். துன்பம் இன்பம் ரெண்டுத்துக்குமே இவர் தான் காரணம்னு நம்பறோம்; உலகத்துல நடக்குற அநீதிக்கெல்லாம் இவர் தான் தீர்வு காணனும்னு ஏங்கறோம். மதம் என்ற சொல்லால் பிரிந்திருக்கும் மக்கள் இடையே அல்லா என்றும் இயேசு என்றும் சிவன் என்றும் இவருக்கு பெயர்கள் உண்டு. பெருமையுடன்…இதோ உங்கள் முன்னால்….நம் கடவுள்!!

தொகுப்பாளர்
: வணக்கம் கடவுளே; உங்கள இன்னிக்கி பேட்டி காணரதுல பெரும் மகிழ்ச்சி! உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி!

கடவுள்: (ஒரு சிறு புன்னகை)

தொகுப்பாளர்
: நேரடியா கேள்விகளுக்கு போகலாம்… மனிதர்கள நீங்க தான் படைச்சேங்கன்னு மத நூல்கள்ள கூறப்படுது; குரான்ல நீங்க ரெண்டு களி மண் பொம்மைகள செஞ்சு உயிர் கொடுத்ததாகவும் பைபிள்ல முதல ஆதாம் எவாழ படைச்சேங்கன்னும் வெவ்வேறு கருத்துக்கள் கூற பட்டிருக்கு. ஆனா திரு.சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சி தான் மனிதன் உருவாக காரணம் என்று சொல்றாரு. உங்க கருத்து?

கடவுள்
: தம்பி.. இந்த டார்வின்… ஒரு சோதா பையன்….கடைசி காலத்துல கிருஷ்ணா ராமா கோவிந்தா இல்லே இயேசு மேரி மாதானு சொல்லிட்டு திரியாம என்ன வம்புக்கு தேவை இல்லாம இழுத்துக்கிட்டு இருந்தான். பூமிக்கு வந்தாச்சு அப்பறம் எப்படி வந்தோம்னு ஆராய்ச்சி பண்ணி என்ன பயன் சொல்லுங்க. மக்களுக்கு என்ன தோணுதோ அத நினைக்கறதுல என்ன தப்புன்னு நான் கேக்கறேன். ஐயோ.. இப்ப கூட அந்த டார்வின் பையன நினைச்சா துண்டு துண்டா வெட்டி போடணும் போல இருக்கு.

தொகுப்பாளர்: ஆனா கடவுளே நீங்க கருணையே வடிவானவர்னு மக்கள் நம்பறாங்க. நீங்க என்னடானா வெட்டனும் குத்தனும்னு பேசறீங்க…

கடவுள்: இது தான் நிதர்சனம் தம்பி…இந்த மக்கள பாத்தா சிரிப்பு தான் வருது… இவங்களே என்ன ஒரு பக்கம் சாந்த சொரூபி, தப்ப மன்னித்து நல்வழி நடத்தும் ஆசான்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம் தப்பு செஞ்சவங்கள வதம் செய்பவன்னு சொல்றாங்க. என்னுடைய ரோல் என்னனு எனக்கே கொழப்பமா இருக்கு (ஒரு நக்கலான புன்னகையுடன்)

தொகுப்பாளர்: (திரு திருவென விழித்த படி) உங்க ஒரு நாள் சாதரணமா எப்படி இருக்கும்? மசூதிலியும் தேவாலயத்திலும் கோவில்லயும் தினமும் ஆயிரக்கணக்குல வேண்டுதல் வருமே…

கடவுள்: நக்கல் தானே தம்பி…10 நாள் தொடர்ந்து உக்காந்தா கூட இவங்க கொறைகள கேட்டு மாளாது…அப்பறம் தானே தீர்வு காண நேரமெல்லாம்…நான் பாத்த வரைக்கும் ஒரு 10 நாள் 20 நாள் ஒரே வேண்டுதல வைப்பாங்க…எதுவும் நடக்கலன்னு தெரிஞ்ச உடனே அதுதான் தலையெழுத்துனு வேற வேலைய பாக்க கேளம்பீடுவாங்க. உங்க சூப்பர் ஸ்டார் கூட ஒன்னு சொல்லுவாரே, ” கடவுள் சோதிப்பார் கை விட மாட்டாருன்னு”…விவரமான ஆளு தம்பி அவரு….ஒரு மாசத்துல இல்ல ஒரு வருஷத்துல கை கொடுப்பேன்னு சொல்லலே. இது மாதிரி புண்ணியவான்கள் இருக்கற வரைக்கும் எனக்கு என்ன கவலை சொல்லுங்க (ஒரு பெருமிதம் கலந்த புன்னகையுடன்)

தொகுப்பாளர்
: (கனவா நனவா என்ற குழப்பத்தில்) கைக்கூப்பி வழிபடரவங்களுக்கே இந்த கதினா உங்கள வணங்க நேரம் இல்லாம இன்னிக்கி உயிர் பொழைச்சா போதுமுன்னு இருப்பவங்க கதி…

கடவுள்
: அது வந்து தம்பி…

தொகுப்பாளர்
: (கோபம் கலந்த விரக்தியுடன்) இல்ல ஐயா….அப்ப ஈழ தமிழர்கள் சொமாலிய நாட்டு மக்கள் இன்னும் தினம் தினம் பசி கொடுமைக்கு இரையாகும் மக்களின் கதி…உங்க கடைக்கண் பார்வை அவங்க மேல படவே இன்னும் பல 100 வருஷம் ஆகும் போலவே….அதுக்குள்ள அவங்களும் அவங்க சந்ததிகளும் கூட அழிஞ்சிடுமே!!

கடவுள்: உன் கோவம் எனக்கு புரியுது தம்பி…ரொம்ப நியாயமானதுதான்…விதின்னு ஒன்னு இருக்கும் போது அத யாரால மாத்த முடியும்.

தொகுப்பாளர்: இதெல்லாம் ரொம்ப அநியாயமா எனக்கு படுதுயா…விதின்னு ஒன்னு இருக்கானு எனக்கு தெரியல….ஆனா அதையும் மீறி அவங்களுக்கு ஒரு நல் வழி காட்டுவீங்கன்னு தானே….அலகு குத்தறது தீமிதிக்கறது மைல் கணக்குல உங்கள பாக்க நடந்து வர்றது எல்லாம்…அதெல்லாம்…?

கடவுள்
: பாரு தம்பி…ரொம்ப பேசற நீ….வாரத்துல ஒரு நாள் விடாம ஏதாவது ஒரு மதத்துல ஏதாவது ஒரு உருவத்துல எனக்கு பூஜை, யாகம், விரதம்..கண் மூடி திறக்கறதுக்குள்ள ராத்திரி ஆகுது…அப்பறம் அர்த்தசாம பூஜை…அப்பறம் வருஷா வருஷம் 1008 ஊர்வலம், கல்யாணம்னு தொவைச்சு புழிஞ்சு எடுக்கறாங்க…. ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்… நீ…

தொகுப்பாளர்: சாமி அங்கயே நிறுத்துங்க…..இது முதல்வன் படபிடிப்பும் இல்ல… நான் அர்ஜுனும் இல்ல…கடசியா என்னதான் சொல்றீங்க?

கடவுள்: எல்லாமே விதி படி தான் நடக்கும்…அஹம் பிரம்மாஸ்மி!!

தொகுப்பாளர்: அது சரி…எனக்கு இதுக்கு மேல கேக்க ஒன்னும் இல்ல கடவுளே…எங்க நிகழ்ச்சில இன்னும் 2 விஷயங்கள் இருக்கு…நேர்க்காணல மையமா வச்சு, வந்த விருந்தினருக்கு ஒரு பட்டம் கொடுப்போம்..நம்ம கலந்துரையாடல கேட்டு கொண்டிருந்த நீதிபதி குழுவின் தீர்ப்பு இதோ….

நீதிபதி குழு தலைவர்: ஐய்யா இன்னிக்கி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கூட ஒரு திருப்திகரமான பதில் நீங்க அளிக்காததுனால….உங்களுக்கு ‘உதவாக்கரை’ பட்டம் வழங்கறோம்!

கடவுள்: (சிரிப்பும் கோபமும் கலந்து) என்ன வச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலியே.. இதெல்லாம் மக்கள் கேட்டாங்கனா கொதிச்சு எழுவாங்க… உங்க டிவி சேனல் அப்பறம் அதோகதி தான்!

தொகுப்பாளர்: நீதிபதி குழுவிற்கு நன்றி! உங்க வருகைக்கு ரொம்ப நன்றி ஐயா! உங்க அனுமதியோட….”டேய் உதவாக்கரை…கெளம்பு காத்து வரட்டும்”…இன்றைய நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வர இதோ நம் அட்வைஸ் ஆறுமுகம்!!

அட்வைஸ் ஆறுமுகம்: இன்ன கண்ணு…எப்படி கீரே? உதவாக்கரைன்னு படா ஜோரா பேரு வச்சாங்கப்பா! இந்த கேப்மாறிய குஷி படுத்த என் பொண்சாதி அடிச்ச லூட்டி இருக்கே…பேஜாரா பூச்சு பா! எங்க பக்கத்து ஊட்டு ஆயா சொல்லும்…விதிய மதியால டேர் டேரா கிழிக்கலாம்னு.. இந்த டுபாகூர நம்பறத விட்டு புட்டு….தப்புன்னு தோணுதா அப்பீட்டு…கரீக்ட்னு தோணுதா ரிபீட்டு…நான் இப்ப எஸ்ஆய்க்கிறேன்…இன்னமா வர்ட்டா!!

h1

கண்ணாடி வீடுகள்

March 17, 2010

“அம்மா …அவங்க யாருனே எனக்கு தெரியாது …நீ மட்டும் போயேன் ”, என முனகிய படியே படுக்கையை விட்டு இறங்கினாள் நளினி.

“பேசாம கிளம்பு …இப்படி விசேஷங்களுக்கு எல்லாம் போனா தான் …நம்ம வீட்லயும் பொண்ணு இருக்குனு நாலு பேருக்கு தெரியும் ”, என கேவலமான ஒரு விளக்கம் அளித்தாள் விசாலாட்சி .. சந்தேகமே வேண்டாம் நளினியின் தாயே தான் .

“இதெல்லாம் சரியே இல்லே மா …சீவி சிங்காரிச்ச மாட்ட சந்தைலே விலை பேசறா மாதிரி இருக்கு நீ சொல்றது ”, என அலுத்துக் கொண்டாள் நளினி.

“போயிட்டு தான் வாயேன் டி …சும்மா வீட்டுலே TV முன்னாடி உக்கார போறே”, என விசாலாட்சியின் கணவரும் குரல் எழுப்ப …இனி நம் சினுங்கல்கள் வேலைக்கு ஆகாது என முடிவு செய்தாள் நளினி.

“ஏதோ நல்ல reception சாப்பாடு உண்டு…அதுக்காக வேணும்னா போகலாம் ; அம்மாவின் கூச்சலுக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அந்த இன்னிசை மழை எவ்வளவோ பரவாயில்லை”, என வேறு வழி இல்லாமல் தன்னை தேற்றி கொண்டாள் நளினி. .

பன்னீர் மணம் வீச ரோஜா இதழ்களும் , கற்கண்டும் வரவேற்க திருமண மண்டபத்தினுள் நுழைந்தனர் .

விசாலாட்சியை கண்ட உடன் நாலைந்து பேர் ஓடோடி வந்தனர் .

“வருவியான்னு சந்தேகம் இருந்தது ..பரவாயில்லை கரெக்டா வந்துட்டே …இது யாரு நளினி தானே …பாத்து ஒரு 3 வருஷம் இருக்கும் …என்ன பண்றே மா ..”, என ஒரே மூச்சில் பேசி முடித்தாள் ஒரு அம்மையார். அம்மாவின் தோழி என சட்டென புரிந்து கொண்டாள் நளினி.

“நான் …” என விடை அளிக்க வாயை திறந்தாள் நளினி …அதற்குள் விசாலாட்சியும் அவர் தோழிகளும் நகை புடவை பற்றிய உரையாடலில் இறங்கி விட்டனர் . “அதுதான …அம்மாவின் தோழி ஆச்சே … நாம பேசறத எங்க கேக்க போறாங்க ; அமைதியா இருப்பது தான் சரி ”, என தீர்மானித்த படி சமையலறை பக்கம் திரும்பினாள் நளினி.

“ஏன்டி நல்ல வசதியான குடும்பம் தான ….ஏன் இப்படி ஒரு பொண்ண பாத்திருக்காங்க , தொட்டு கண்ணுல மை வச்சுக்கலாம் போல …”, விசாலாட்சியின் தோழிகளில் ஒருத்தி.

“மெதுவா பேசு டி …யாருக்காவது கேட்டுற போகுது …நல்ல வரதட்சனை கொடுத்திருப்பான் பொண்ணோட அப்பன் …அதுதான் இப்படி ஒரு பையன மடக்கி போட்டுட்டாங்க”…இது விசாலாட்சி .

“இந்த பொண்ண பாத்தா ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ சுஹாசினி மாதிரி இல்லே …?” என ஒருத்தி கேட்க… “சுஹாசினி கொஞ்சம் கலரா இருந்தான்னு நினைக்கறேன் ”, என்று இன்னொருத்தி குரல் எழுப்ப அந்த வட்ட மேசை மாநாட்டில் சிரிப்பொலி அடங்க நிமிடங்கள் 5 ஆகி இருக்கும் .

குளிர் பான பெட்டியின் இதமான காற்று நளினியின் மனப்புழுக்கத்தை இன்னும் தூண்டி விடுவது போல் இருந்தது . “அம்மா …ஏன் இப்படி ”…என பேச ஆரம்பித்த நளினியின் வார்த்தைகள் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.

“கோடி கோடியா பணம் கொடுத்தாலும் இப்படி ஒரு கேவலமான பொண்ண என் பையனுக்கு …மாட்டவே மாட்டேன் ”, என நளினியின் தாய் சூளுரைத்தாள்.

“ஆமாம் கேக்க மறந்துட்டேன் …பையன் ஆஸ்திரேலியால இருக்கானே …அங்க ஏதோ நிற வெறி பிரச்சனை எல்லாம் ரொம்ப அதிகமாகி இருக்காமே …என்ன சொல்றான் ”, என ஒரு நலன் விரும்பி கேள்வி எழுப்பினாள்.

“அவன் இருக்கும் இடத்துல ஒன்னும் பிரச்சனை இல்லியாம் ….நான் கூட திரும்பி வந்துடுன்னு தான் சொல்றேன் …எங்க கேக்கறான் . அவனுக்கு அந்த lifestyle தான் பிடிச்சிருக்காம்.

News எல்லாம் பாக்கும் போது தான் வெளிநாடுகள்ல இருக்கற நிற வெறி பத்தி எல்லாம் தெரிய வருது …அப்படி என்ன வெறுப்போ நம்ம தோல பாத்தா …”, என அலுத்து கொண்டாள் விசாலாட்சி .

ஒரு நிமிடம் நளினி நடப்பது புரியாமல் திடுக்கிட்டு நின்றாள்.

வெட்கம் கலந்த புன்னகையுடன் மேடையில் நின்ற மணப்பெண்ணை பார்த்தாள். சில நிமிடங்களுக்கு முன் அவள் சரமாரியான நிற வெறி தாக்குதலுக்கு உள்ளானதை நினைத்தாள்…கொதித்தாள்…சட்டென எட்டி பார்த்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.

h1

Two Dogs and Hindi

August 25, 2009

வட மாநிலங்களுக்கு வரும் பிற மாநில மாணவர்களால் சரளமாக ஹிந்தி பேச முடிவதில்லை. ஆனால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார்கள். எனவே நமது நாட்டுக்குள் முக்கியத் தொடர்பு மொழியாக இருக்கும் ஹிந்தியை அனைத்து மாணவர்களும் அறிந்திருப்பது அவசியம். ஹிந்தியை அனைவருக்கும் கற்பிக்க நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான தருணம்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல்

A man had two dogs – a big one and a small one. He wanted his dogs to go in and out of the house freely without him having to keep the house door open all the time. So he built two “trap doors” – one big trap door for the big dog and one small for the small dog. Neighbors who saw these two doors laughed at him and called him an idiot. Why put a big door and a small door? All that was needed was the big door. Both the big and the small dog could use it!

Indian government’s arguments for making Hindi the official or link language of India are as ridiculous as the need for a big door and a small door for the big dog and the small dog. Indian government agrees that English is needed for communication with the world, and every school in India teaches English after the fifth grade. Then the Indian government says that all of us should also  know Hindi  in order to communicate amongst ourselves within India. I ask, “Since every school in India teaches English, why can’t it be our link language? Why do Tamils have to study English for communication with the world and Hindi for communications within India? Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!”

– C.N. Annadurai

நன்றி : www.tamiltribune.com